இந்திய -இலங்கை மீனவர் பிரச்சினையும் பூகோள அரசியல் யதார்த்தமும் !
இந்தியா-இலங்கை இடையேயான மீனவர் பிரச்சினையானது பல தசாப்தங்களாக நீட்சியடைந்த ஒன்றாக காணப்படுதின்றது. தற்காலத்தில் இலங்கையின் வட பகுதியில் போராட்டமாக மாறியிருகின்றது. 12.12.2025 யாழ்பாணத்தில் மீனவர் சங்கங்கள் மற்றும் மீனவர்கள், இந்திய மீனவர்கள் அத்துமீறி தமது கடற்பரப்பிற்குள் மீன்பிடிப்பதாகவும் தமது மீன்பிடி வலைகளை அழிப்பதாகவும், சூறையாடுவதாகவும் கூறி கடல் தொழில் நீரியல் வள திணைக்களத்தின் முன்பாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்பாட்டத்தின் போது கடல் தொழில் நீரியல் வள திணைக்களத்தின் யாழ் மாவட்ட உதவி பணிப்பாளர் கிரிஷ்னன் அகிலனிடமும் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனிடமும் தமது பிரச்சினை அடங்கிய கோரிக்கை மகஜரை கையழித்தனர். இதன்போது தமது வளத்தை இந்திய மீனவர்கள் இழுவை, மடி படகை பயன்படுத்தி சுரண்டுவதாகவும், தங்களுடைய தொழிலையும் வாழ்வாதாரத்தையும் அழிப்பதாகவும் தெரிவித்தனர். இந்த ஆர்பாட்டத்தின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த என்.பி.பி உறுப்பினர் யாழ்பாணத்தில் இருக்கும் இந்திய துணை தூதரகம் மீனவர் பிரச்சினை தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் இந்த தூதரகம் யாழ்பாணத...