Posts

இந்திய -இலங்கை மீனவர் பிரச்சினையும் பூகோள அரசியல் யதார்த்தமும் !

Image
இந்தியா-இலங்கை இடையேயான மீனவர் பிரச்சினையானது பல தசாப்தங்களாக நீட்சியடைந்த ஒன்றாக காணப்படுதின்றது. தற்காலத்தில் இலங்கையின் வட பகுதியில் போராட்டமாக மாறியிருகின்றது. 12.12.2025 யாழ்பாணத்தில் மீனவர் சங்கங்கள் மற்றும் மீனவர்கள், இந்திய மீனவர்கள் அத்துமீறி தமது கடற்பரப்பிற்குள் மீன்பிடிப்பதாகவும் தமது மீன்பிடி வலைகளை அழிப்பதாகவும், சூறையாடுவதாகவும் கூறி கடல் தொழில் நீரியல் வள திணைக்களத்தின் முன்பாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்பாட்டத்தின் போது கடல் தொழில் நீரியல் வள திணைக்களத்தின் யாழ் மாவட்ட உதவி பணிப்பாளர் கிரிஷ்னன் அகிலனிடமும் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனிடமும் தமது பிரச்சினை அடங்கிய கோரிக்கை மகஜரை கையழித்தனர். இதன்போது தமது வளத்தை இந்திய மீனவர்கள் இழுவை, மடி படகை பயன்படுத்தி சுரண்டுவதாகவும், தங்களுடைய தொழிலையும் வாழ்வாதாரத்தையும் அழிப்பதாகவும் தெரிவித்தனர். இந்த ஆர்பாட்டத்தின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த என்.பி.பி உறுப்பினர் யாழ்பாணத்தில் இருக்கும் இந்திய துணை தூதரகம் மீனவர் பிரச்சினை தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் இந்த தூதரகம் யாழ்பாணத...

மலையகத்திற்கான மாற்றுத்திட்டங்களும் அரச பலவீனத்தின் தொடர்ச்சியும்!

Image
நவம்பர் இறுதியில் இலங்கையில் ஏற்பட்ட டிட்வா புயல் இதுவரை காலமும் இல்லாத அளவிற்கு பேரழிவுகளையும், மறக்கமுடியாத நினைவுகளையும் ஏற்படுத்தியிருந்தது. இந்த புயலால் இலங்கை பூராகவும் 630இற்கு மேற்பட்டோர் உயி ரிழந்ததாகவும் 200இற்கு மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும் 5300இற்கு மேற்பட்ட வீடுகள் முழுமையாகவும் 86800இற்கு மேற்பட்ட வீடுகள் பகுதி அளவிலும் சேதமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலை யம் அறிவித்தது. இதில் அரைவாசிக்கு மேற்பட்டோர் மலையக மண்சரிவினால் உயிரிழந்தும் காணாமலும் வீடுகளை இழந்தும் உள்ளனர். இக்கட்டுரையும் மலையக மக்களின் அனர்த்த பாதிப் புக்களுக்கு தீர்வான நகர்வுகள் பற்றிய தேடலை முதன்மைப்படுத்துகிறது. மலையக மக்கள் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தோட்டத் தொழிலுக்காக இந்தியாவில் இருந்து அழைத்துவரப் பட்டவர்கள். இன்று வரை இலங்கையில் குடியுரிமையின்மை, காணி, வீடு இன்மை, தோட்ட தொழிலுக்கான சரியான ஊதியமின்மை, தமது தேவையை மேற்கொள்ள தாய்மொழி சிக்கல், அரச அடக்குறை, புறக்கணிப்பு, பாரபட்சம் என அரசியல் துயரங்களை அனுபவிக்கும் நிலையிலும் இயற்கை அனர்த் தங்கள் அத்துயரத்திற்கு வலுச்சேர்க்கின்றது. இந...

இந்தியாவின் ஆபரேஷன் சாகர் பந்துவின் அரசியல் பரிமாணம்?

Image
சர்வதேச அரசியலில் மனிதாபிமான உதவி நடவடிக்கைகள் மென் அதிகாரம் (soft power) மற்றும் புவிசார் அரசியல் (Geopolitics) என்பவற்றில் முக்கிய கருவியாக மாறிவிட்டது. குறிப்பாக உலக நாடுகள் தங்கள் அண்டை நாடுகளுடனான உறவுகள், பேரிடர் மேலாண்மை, பாதுகாப்பு, கடற்பாதுகாப்பு என்பன உதவி மற்றும் பரஸ்பர ஒற்றுமையை வெளிப்படுத்துகின்றதாக உள்ளது. இது இராஜதந்திர செயற்பாட்டிற்கான நகர்வாகவும் புரிந்து கொள்ளப்படுகிறது. இத்தகைய தன்மையினை வெளிப்படுத்தும் ஒன்றாகவே இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு முதலிடம் கொள்கை (Neighborhood first policy)  காணப்படுகின்றது. இலங்கையின் (நவம்பர் 28,29 2025) பல பகுதிகள் டித்வா (Cyclone Ditwah) புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட செயல்பாடானது பொருளாதார ஒத்துழைப்பைக் கடந்து  இராஜதந்திர நகர்வுக்கு வழிகோலுகின்றது.இப்பின்ணனியில் இக்கட்டுரையும் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகள் மூலம் பிராந்தியத்தில்  நட்புறவை நிறுவுகிறதென்பதை தேடுவதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.  இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு முதலிடக் கொள்கை பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் 2014ஆம் ஆண்டு முதன்முதலில் பதவியேற்றபோது மு...

பேசாத பொம்மை சொல்லும் சோகக் கதை: செம்மணியின் ஆழங்கள்

Image
பேசாத பொம்மை சொல்லும் சோகக் கதை: செம்மணியின் ஆழங்கள்.   தி. டிலக்சன் மனித வரலாற்றின் இருண்ட பக்கங்களில் வார்த்தைகளால் விவரிக்க முடியாத துயரங்களும் காலத்தால் அழியாத வலிகளும் புதைந்து கிடக்கின்றன. அந்தப் பக்கங்களில் ஒன்றுதான் இலங்கையின் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள செம்மணி என்ற நிலப்பரப்பு. அங்கு கண்டெடுக்கப்பட்ட ஒரு குழந்தையின் பொம்மை வெறும் விளையாட்டுக் கருவியாக இல்லாமல் கண் விழித்த சாட்சியாக நின்று செம்மணியின் ஆழங்களில் புதைந்துள்ள ஒரு சோகக் கதையை உலகுக்கு உரக்கச் சொல்லிக் கொண்டிருக்கிறது. அந்தப் பொம்மை உருக்குலைந்த நிலையில் மண்ணின் நிறம் பூசி ஒருபுறம் நீலமும் மறுபுறம் செம்மண்ணின் தடயங்களுமாய் கிடக்கிறது. ஆனால் அதன் கண்களைப் பாருங்கள் அவை இன்னும் திறந்திருக்கின்றன. ஒரு குழந்தையின் கைகளில் தவழ்ந்து அதன் சிரிப்புக்கும் துள்ளலுக்கும் சாட்சியாய் இருந்திருக்க வேண்டிய அந்தப் பொம்மை இன்று ஒரு பெரும் துயரத்தின் குறியீடாக மாறி நிற்கிறது. செம்மணி மனிதப் புதைகுழியில் கண்டெடுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான எலும்புக் கூடுகளுக்கு மத்தியில் ஒரு மழலையின் அடையாளம் என்னவாக இருக்க முடியும்? இந்தக் கேள்விக்கு ...

"மரணத்தின் மௌனம் கலைக்கும் செம்மணி: புதிய அகழ்வாராய்ச்சியின் வெளிச்சம்"

Image
"மரணத்தின் மௌனம் கலைக்கும் செம்மணி: புதிய அகழ்வாராய்ச்சியின் வெளிச்சம்" தி. டிலக்சன் யாழ்ப்பாணத்தின் செம்மணி ஒருகாலத்தில் அமைதியான விவசாயக் கிராமமாக இருந்தது. ஆனால் இன்று அதன் பெயர் மனிதப் புதைகுழிகளுடனும் காணாமல் போனவர்களின் கண்ணீருடனும் பின்னிப் பிணைந்துள்ளது. இலங்கையின் உள்நாட்டுப் போரின் வடுக்களைத் தாங்கி நிற்கும் ஆயிரக்கணக்கான கிராமங்களில் செம்மணியும் ஒன்று. எனினும் இங்கு கண்டுபிடிக்கப்பட்ட புதைகுழிகள் போரின் இருண்ட பக்கங்களை உலகிற்கு எடுத்துக்காட்டியதுடன், நீதிக்கான ஒரு நீடித்த போராட்டத்தின் குறியீடாகவும் மாறியுள்ளன. அண்மையில் புதிய அகழ்வாராய்ச்சிகள் மூலம் மீண்டும் வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ள உண்மைகள் மரணத்தின் மௌனத்தை உடைத்து வரலாற்றின் பக்கங்களில் புதிய சோக அத்தியாயங்களைச் சேர்க்கின்றன. ஒரு கொடூரமான வாக்குமூலமும் ஆழமான உண்மைகளும் செம்மணியின் துயர வரலாறு 1998 ஆம் ஆண்டில் வெளிச்சத்திற்கு வந்தது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசுவாமி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட இலங்கை இராணுவ வீரர் சோமரத்ன ர...

பனிப்போரின் புதிய முகம்: வல்லரசு போட்டியும் அதன் விளைவுகளும்

Image
பனிப்போரின் புதிய முகம்: வல்லரசு போட்டியும் அதன் விளைவுகளும். தி. டிலக்சன் இருபதாம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் உலகை உலுக்கிய பனிப்போர் சோவியத் யூனியனின் சிதைவுடன் முடிவுக்கு வந்ததாகக் கருதப்பட்டது. ஆனால் தற்காலத்தில் நாம் காண்கிற புதிய உலக ஒழுங்கு அது ஒரு முடிவல்ல மாறாக ஒரு இடைவெளி என்பதை உணர்த்துகிறது. வல்லரரசுகளுக்கு இடையிலான போட்டி ஒரு புதிய முகத்தை எடுத்து உலக அரங்கில் மீண்டும் ஒருமுறை பதற்றத்தையும், நிச்சயமற்ற தன்மையையும் விதைத்துள்ளது. அமெரிக்கா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளுக்கிடையிலான இந்த மறைமுகப் போர் வெறும் ஆயுதப் போட்டியாக இல்லாமல், பொருளாதாரம், தொழில்நுட்பம், புவிசார் அரசியல் ஆதிக்கம், தகவல் போர் எனப் பல பரிமாணங்களைக் கொண்டுள்ளது. இந்தப் புதிய பனிப்போர் நாடுகளுக்கிடையிலான உறவுகளைச் சிக்கலாக்குவதுடன், சிறிய நாடுகளின் நிலைத்தன்மையையும் உலக அமைதியையும் அச்சுறுத்துகிறது. பொருளாதார ஆதிக்கப் போட்டி: புதிய பனிப்போரின் மையப்புள்ளிகளில் ஒன்று பொருளாதார ஆதிக்கமாகும். அமெரிக்காவும் சீனாவும் உலகப் பொருளாதாரத்தில் தங்கள் செல்வாக்கை நிலைநிறுத்த கடுமையாகப் போட்டியிடுகின்றன. சீனா தனது ...

ஜனநாயகத்தின் கழுத்தில் தொங்கும் வாளாக பயங்கரவாத தடைச் சட்டம். தற்போதைய அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன?

Image
ஜனநாயகத்தின் கழுத்தில் தொங்கும் வாளாக பயங்கரவாத தடைச் சட்டம். தற்போதைய அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன? தி. டிலக்சன் இலங்கையில் பல தசாப்தங்களாக ஜனநாயகத்தின் கழுத்தில் தொங்கும் வாளாகப் பயங்கரவாத தடைச் சட்டம் இருந்து வருகிறது. இந்தச் சட்டம் பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்காக உருவாக்கப்பட்டாலும் அரசியல் எதிர்ப்பாளர்கள், ஊடகவியலாளர்கள், அப்பாவி மக்கள் மற்றும் சிறுபான்மையினரை ஒடுக்குவதற்கான ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டு வந்த வரலாறு மிகவும் கசப்பானது. இத்தகைய சூழலில் தேசிய மக்கள் சக்தி தலைமையிலான புதிய அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்த பிறகு இந்தச் சட்டத்தை நீக்குமா அல்லது அதே பழைய வழியில் அதனைத் தனது அதிகாரத்தை நிலைநிறுத்தப் பயன்படுத்துமா என்ற கேள்வி அனைத்துத் தரப்பினராலும் உற்றுநோக்கப்பட்டு வருகிறது. இது வெறுமனே சட்டரீதியான விவாதம் அல்ல மாறாக இலங்கையின் எதிர்கால ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் கருத்துச் சுதந்திரம் ஆகியவற்றின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் ஒரு கேள்வி.இது பற்றிய விவாதங்கள் தற்காலத்தில் தொடர்ச்சியாக தெசிய மட்டத்தில் மட்டுமின்றி சரவதேச மட்டத்திலும் விவாதிக்கப்பட்டு வருகின்றன. பயங்கரவாத ...